மக்களின் உரிமைகளை இலங்கை மதிக்க வேண்டும் – ஐ.நா!
Sep 30, 2022 64 views Posted By : YarlSri TV
மக்களின் உரிமைகளை இலங்கை மதிக்க வேண்டும் – ஐ.நா!
கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் Clement Voule கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை பொதுக் கூட்டங்களுக்குத் தடையாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் இலங்கை நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், கொழும்பு – உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் தலைமையகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்புப் படைகள் மற்றும் முப்படைத் தளபதிகளின் தலைமையகம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல இடங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago