தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம்!
Sep 28, 2022 83 views Posted By : YarlSri TV
தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம்!
கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய தீ விபத்தினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் சுமார் 300 பேர் அளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடமைப்புத் தொகுதிகளில் இருந்து வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவு இன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago