Skip to main content

யாழில், வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

Sep 26, 2022 67 views Posted By : YarlSri TV
Image

யாழில், வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! 

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.



குறித்த வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பலாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி இந்தக் கும்பல் தீ வைத்துள்ளனர்.



அத்துடன் வீட்டில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சேதம் விளைவித்து விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.



சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை