உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன!
Sep 26, 2022 67 views Posted By : YarlSri TV
உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன!
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் 'எந்த பிரச்சனையும் இல்லை. போராட்டங்கள் நடத்தலாம். கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் சட்ட முறைப்படி அந்த கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.
ஒரு கிராமத்தில்கூட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அந்தந்த பொலிஸ் நிலையங்களில் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.
அன்றாட வாழ்க்கையை துன்பகரமானதாக மாற்றும் விடயங்களை எல்லோரும் விரும்புவதில்லை. எனவேஇ அதையெல்லாம் பரிசீலித்து பொலிஸார் அந்த அனுமதியை வழங்குகின்றனர்.
திடீர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளன.
உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை. காலங்காலமாக வரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் விடயங்கள் இவை.
கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அங்கு தங்கள் பணிகளைச் செய்ய முடியவில்லை.
அவ்வாறான இடையூறுகள் ஏற்பட்டால் அவ்வாறான இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முந்தைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.
அதனால்தான் கொழும்பின் பெருநகரில் சில இடங்களை மட்டும் உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி உத்தரவின் மூலம் நியமித்துள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago