வீட்டு உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்
Sep 25, 2022 71 views Posted By : YarlSri TV
வீட்டு உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இதன்போது 17 பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருவையாறு பகுதிய சேர்ந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவரது வீட்டிற்கு நுழைந்த திருடர்கள், வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் தாக்கியதுடன் கை , கால் என்பவற்றைக் கட்டி விட்டு பணம் நகை எங்கே உள்ளது என வினவியுள்ளனர்.
இதன்போது மனைவி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கையில் இருந்த காப்பையும் கழட்டி கொடுத்தபோது தாலிக்கொடி எங்கே எனக்கேட்டு மீண்டும் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிட்டவர்கள் தப்பிச் சென்ற போது கைத்தொலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இனையடுத்து வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago