மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்!
Sep 25, 2022 57 views Posted By : YarlSri TV
மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்!
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி ஒரு கல்வி வலயத்தில் இருந்து 30 பேர் என நாடு முழுவதிலும் உள்ள 99 வலயங்களைச் சேர்ந்த 2970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலமை பரில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5000 உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமுறையும் சாதாரண தரப் பரீட்சை வெளியாகி, க.பொ.த உயர்தரம் ஆரம்பமாக முன்னர் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை ஊடக விளம்பரப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago