Skip to main content

யாழில் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி!

Sep 24, 2022 70 views Posted By : YarlSri TV
Image

யாழில் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி! 

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ். மாவட்டத்தை வந்தடைந்ததுடன்  இன்றைய தினம்  வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.



கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி பருத்தித்துறை நகருக்குள் இன்று காலை பயணித்தது.



இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.



பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.



இந்த ஊர்திப் பவனியானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை சென்றடையவுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை