கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது
Apr 03, 2022 100 views Posted By : YarlSri TV
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் கோவா மாநிலத்திற்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.
மாணவர்கள் சென்ற பஸ் கோவா மாநிலம் பனாஜியை அடுத்த பழைய கோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியது. உடனே பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதற்கிடையே பஸ் தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago