Skip to main content

இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு - 81 பேர் பலி

Apr 03, 2022 99 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் மேலும் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு - 81 பேர் பலி 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,335 பேரும், நேற்று 1,260 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,096 ஆக குறைந்துள்ளது. 



தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345- ஆக உயர்ந்துள்ளது. 



தொற்று பாதிப்பில் இருந்து 1,447 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,013 ஆக உள்ளது. 



இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை