ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை சூப்பர் பவர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானங்கள்
Mar 24, 2022 86 views Posted By : YarlSri TV
ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை சூப்பர் பவர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் ரஷ்ய போர் விமானங்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனில் கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் நகரங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்யா கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரான மரியுபோல் மீது ரஷ்ய போர் கப்பல்கள் கடந்த 3 வாரங்களாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சூப்பர் பவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் போர் விமானங்கள் அலை அலையாக பறந்து சென்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago