2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது- உக்ரைன் குற்றச்சாட்டு
Mar 22, 2022 81 views Posted By : YarlSri TV
2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது- உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக்களை பிணயக்கைதிகளாக பிடிப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷியா கடத்தி சென்று உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-
டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுள்ளது. ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷியாவுக்கு சட்ட விரோதமாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ரஷியாவின் படையெடுப்பில் குழந்தைகள் குறி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி லும் உள்ளது.
உக்ரைன் மீது போரை தொடங்குவதற்கு முன்பு ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர் வசம் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தனி சுதந்திர நகரங்களாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago