உக்ரைனில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்: பதறவைக்கும் Cctv காட்சிகள்
Mar 22, 2022 106 views Posted By : YarlSri TV
உக்ரைனில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்: பதறவைக்கும் Cctv காட்சிகள்
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில்-ரஷ்யா 26 நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் முழு மூச்சியில் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடைந்து இருப்பினும், இதுவரை போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை, இதனைதொடர்ந்து இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவங்களை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி மாறிமாறி எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்-வில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்த cctv வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1505839896426074113
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
சரண்யா பொன்வண்ணன் முதல் சிம்ரன் வரை.. தமிழ் சினிமாவின் சிறந்த துணை நடிகைகள்
-
பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி!
-
இந்தியா இலங்கை கடன் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!.இந்தியா, இலங்கைக்கு வழங்க உள்ள பெருந்தொகை கடன் தொடர்பான செய்திகளை இந்தியாவின் ஆங்கில ஊடகமான NDTV நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய இலங்கை பணம் இல்லாத நாடு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலைமையில் இருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனுதவியை இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனை குறித்தும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்தியா வழங்கும் பணத்தில் இந்தியாவிடமே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும். அதேவேளை இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது என NDTVயின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக NDTVயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago