அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யும் சீனா
Jun 03, 2022 84 views Posted By : YarlSri TV
அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யும் சீனா
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப் போயுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருளை சீனா அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
கர்ப்பிணித் தாய்மாருக்கான மருந்து
எனோக்சபரின் சோடியம் எனப்படும் இந்த மருந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானதாக காணப்படும் போதும் தற்போதைக்கு இலங்கையில் எந்தவொரு இடத்திலும் கிடைக்காத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பத்து இலட்சம் சீன யுவான்கள் பெறுமதியான இந்த மருந்துகள் அடங்கிய சிரிஞ்சுகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதன் இலங்கைப் பெறுமதி 54 கோடி ரூபாவாகும். இந்த அன்பளிப்புத் திட்டத்தின் கீழ் சீன அரசாங்கத்தினால் 512,640 சிரிஞ்சுகள் எனொக்சபரின் சோடியம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
ஆறுமாத கால மருந்துத் தேவை
இலங்கையின் ஆறுமாத கால மருந்துத் தேவையை அதனைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக இன்றைய தினம் 256,320 சிரிஞ்சுகள் இலங்கையை வந்தடையவுள்ளன.
இரண்டாவது கட்ட மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு இந்த மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என்றும் சீனத் தூதரகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நலவாரியத்தில் நடைபெறும் குளறுபடிகளை களையக் கோரி திண்டுக்கல் மாவட்டநலவாரியம் முன்பாக சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
-
இந்தியாவின் ராணுவ பராக்கிரமத்தை கேட்டு நடுநடுங்கிப் போன சீனா..!! இந்தியாவின் காலில் விழுந்து சரண்டரானது?
-
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago