நெருக்கடியான நிலையில் நாடு:வெளிநாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட மிகப் பெரிய தீவு
May 12, 2022 72 views Posted By : YarlSri TV
நெருக்கடியான நிலையில் நாடு:வெளிநாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட மிகப் பெரிய தீவு
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான இந்த தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பில் 2000 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது எப்படி என சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
எதனை நிர்மாணிப்பதற்காக இந்த தீவு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவில்லை. பல்லுயிர்களை கொண்டுள்ள இந்த தீவில் நிர்மாணிப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் பெற வேண்டிய சுற்றுச் சூழல் சம்பந்தமான அறிக்கையும் பெறப்படவில்லை என சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இல்லாத சந்தரத்ப்பத்தில் எவரது தேவைக்காக இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கூறியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago