Skip to main content

பிரமுகர்கள் குழு நாட்டிலிருந்து வெளியேறும் தகவல்! கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

May 10, 2022 74 views Posted By : YarlSri TV
Image

பிரமுகர்கள் குழு நாட்டிலிருந்து வெளியேறும் தகவல்! கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை 

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை சோதனையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



பிரமுகர்கள் குழுவொன்று நாட்டிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 





அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.





இதற்காக கொழும்பில் ஐந்து விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த நிலையில் கொழும்பு - ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்தன.



நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என தெரிவிக்கப்பட்டும் நிலையில், ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்திருந்தன. 





இதேவேளை  திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பதுங்கி இருக்கலாம் என தெரிவித்து கடற்படைத் தளத்திற்கு முன்னால் குழுமியுள்ள மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை