ரஷ்ய படைகளை உயிருடன் சிறைப்பிடித்த உக்ரைன் இராணுவ படை!
Feb 25, 2022 87 views Posted By : YarlSri TV
ரஷ்ய படைகளை உயிருடன் சிறைப்பிடித்த உக்ரைன் இராணுவ படை!
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதல் நாளான இன்று இரு நாட்டு தரப்பினருக்கும் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இருப்பினும் உக்ரைன் படைகளுடன் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சி படையின் தாக்குதலில் ரஷ்யா பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிய வருகிறது.
தலைநகர் கீவ்வின் சில பகுதிகளை ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட போதும், பதிலடி காரணமாக மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் படைகள் கொண்டு வந்துள்ளன. தீவிரமான படை நடவடிக்கையின் போது ரஷ்ய துருப்புக்களை உக்ரைன் படையினர் உயிருடன் சிறைப்பிடித்துள்ளனர்.
இதேவேளை உக்ரைனில் பதிலடி காரணமாக ரஷ்யாவின் 8 வானூர்திகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய படைகளின் தாக்குதலில் 50 உக்ரேன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 10 பொது மக்களும் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago