Skip to main content

காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண்! கல்யாணம் முடிந்தும்...

Feb 22, 2022 101 views Posted By : YarlSri TV
Image

காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண்! கல்யாணம் முடிந்தும்... 

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தமிழக வாலிபரை கரம் பிடித்துள்ளார் இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி.



சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் இலங்கை பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பானது.



நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.



இந்நிலையில் சுற்றுலா விசா மூலம் சேலம் வந்தடைந்தார் நிஷாந்தினி, அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.



தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.



இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இதற்கிடையே விசா காலமும் விரைவில் முடிவடைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை