Skip to main content

சாரதியின் கவனயீனத்தால் நேர்ந்த விபரீதம்!

Feb 10, 2022 97 views Posted By : YarlSri TV
Image

சாரதியின் கவனயீனத்தால் நேர்ந்த விபரீதம்! 

பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பொலன்னறுவை தொடக்கம் லங்காபுரை வரையிலான பணியாளர்களை தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இதன் போது 23 பணியாளர்கள் அதில் பயணித்துள்ளனர் எனவும் அவர்களில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை