கொழும்பில் பெரும் பதற்றநிலை: ஆவேசத்துடன் முற்றுகையிட்ட மக்கள்
Mar 18, 2022 91 views Posted By : YarlSri TV
கொழும்பில் பெரும் பதற்றநிலை: ஆவேசத்துடன் முற்றுகையிட்ட மக்கள்
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (17-03-2022) கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலையில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸாரினால் அச்சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இன்று காலையிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்தவர்கள் மத்தியிலும் பலமுறை குழப்பம் ஏற்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், காலை 8.00 மணியில் இருந்து மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது மண்ணெண்ணெய் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த மக்களால் எரிபொருள் நிலையம் முற்கையிடப்பட்டு்ள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago