இலங்கை வந்த வெளிநாட்டவர் ரயிலில் இருந்து விழுந்து பலி!
Mar 18, 2022 103 views Posted By : YarlSri TV
இலங்கை வந்த வெளிநாட்டவர் ரயிலில் இருந்து விழுந்து பலி!
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பட்டிப்பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அஹமட் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்ற சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.
எல்ல புகையிரத நிலையத்திற்கு உடரட மெனிகே ரயிலில் பயணித்த அவர், நேற்று (16) பட்டிப்பொல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த எகிப்திய பிரஜை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago