ATM பயன்படுத்துவோருக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!.
Mar 16, 2022 85 views Posted By : YarlSri TV
ATM பயன்படுத்துவோருக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!.
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள் பணத்தை பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது.
மின்சார தடை காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் அட்டையை செலுத்திய பின்னர் இயந்திரம் செயலிழந்து விடுவதாக தெரியவந்துள்ளது. இதனால் பணமும் அட்டையும் இயந்திரத்தில் சிக்கிக் கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவதாக மின்சாரம் தடைப்பட்டால், ஜெனரேட்டர் இயங்கும் வரை இயந்திரம் செயற்படும் வகையில் UPS பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் வங்கியிடம் வினவும் போது UPS உடைந்து விட்டதாகவும் மக்கள் அதிகமாக வருவதனால் ஒன்றும் செய்ய முடியாதெனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தையும் பெற முடியாமல் சிக்கி தவிப்பதாக பேஸ்புக் பக்கங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது எந்தவொரு சேவையையும் பெற்றுக்கொள்வது என்றாலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ஷர்களின் ஆசியாவின் அதிசயம் இலங்கை எனும் கோஷத்தின் வெளிப்பாடாகவே இதனை பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago