ரஷ்ய இராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பிரேத அறைகள்
Mar 14, 2022 103 views Posted By : YarlSri TV
ரஷ்ய இராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பிரேத அறைகள்
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நாட்டின் பிரேத அறைகளில் குவிந்து கிடப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலாரஸில் உள்ள பிரேத அறைக்கு கொண்ட செல்லப்படுவதாகவும், பின் அங்கிருந்து விமானம் அல்லது புகையிரதம் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
பெலாரஸ் நகரங்களான Mozyr, Homel மற்றும் Narouilaவில் உள்ள பிரேத அறைகளே இவ்வாறு நிரம்புள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
இறந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய வீரர்கள் பற்றிய தகவல்களைப் பரப்பினால் அல்லது பிடிபட்டால், அவர்களின் வேலையை இழக்க நேரிடும் என்று பெலாரஷ்ய மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களாக நடந்து வரும் போரில் இதுவரை பல ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்ய படையினருக்கு அந்தப்போர் மிகவும் இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தற்போது புரிந்திருக்கும்.
ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி இதுவரை கிடைக்காததால் ரஷ்ய படையினர் மத்தியில் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மனச்சோர்வு ஏற்பட்டுள்ள அவர்கள் யுத்த களத்தில் சரியாக போரிடமுடியாத நிலையில் பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago