அப்பாவின் செயலால் கோபமும், வேதனையும் அடையும் நடிகர் விஜய்!
Mar 14, 2022 100 views Posted By : YarlSri TV
அப்பாவின் செயலால் கோபமும், வேதனையும் அடையும் நடிகர் விஜய்!
எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் விஜய்க்கும் இடையே சமீப காலமாக பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் சில மாதங்களாக அப்பாவும், மகனும் பேச்சு இல்லையென தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
இதேவேளை நடிகர் விஜய் ஒரு விஷ வளையத்தில் சிக்கியிருப்பதாக அவரது அப்பா எஸ்.ஏ.சி. சந்திரசேகர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தன் வாழ்க்கையை பற்றி பேசி காணொளி எடுத்து அதை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். முதல் காணொளியில் சாலையில் இருக்கும் பிளாட்பார்மில் அமர்ந்திருந்தவாறு போட்டிருந்தார்.
இரண்டாவது காணொளியில் இறந்துபோன தன் மகள் வித்யா பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். இப்படி பிளாட்பார்மில் இருப்பதும், வித்யா பற்றி பேசுவதும் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். என்னை கடுப்பேற்றி பார்க்கவே இந்தப்பா இப்படி எல்லாம் செய்கிறார் என்று கோபமும், வேதனையும் அடைந்து வருகிறாராம் விஜய்.
யார் இந்த எஸ்.ஏ. சி. என்கிற பெயரில் சந்திரசேகர் வெளியிடும் காணொளிகளால் அப்பா, மகன் இடையேயான விரிசல் மேலும் பெரிதாகியிருக்கிறதாம்.
விஜய்யுடன் சேர முடியாத ஆதங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி செய்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. தன் அப்பா தெருவில் நின்று காணொளி வெளியிடுவது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago