Skip to main content

அப்பாவின் செயலால் கோபமும், வேதனையும் அடையும் நடிகர் விஜய்!

Mar 14, 2022 100 views Posted By : YarlSri TV
Image

அப்பாவின் செயலால் கோபமும், வேதனையும் அடையும் நடிகர் விஜய்! 

எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் விஜய்க்கும் இடையே சமீப காலமாக பிரச்சனை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் சில மாதங்களாக அப்பாவும், மகனும் பேச்சு இல்லையென தகவல் வெளியான வண்ணம் உள்ளது.



இதேவேளை நடிகர் விஜய் ஒரு விஷ வளையத்தில் சிக்கியிருப்பதாக அவரது அப்பா எஸ்.ஏ.சி. சந்திரசேகர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.



இந்த நிலையில் தன் வாழ்க்கையை பற்றி பேசி காணொளி எடுத்து அதை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். முதல் காணொளியில் சாலையில் இருக்கும் பிளாட்பார்மில் அமர்ந்திருந்தவாறு போட்டிருந்தார்.



இரண்டாவது காணொளியில் இறந்துபோன தன் மகள் வித்யா பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார். இப்படி பிளாட்பார்மில் இருப்பதும், வித்யா பற்றி பேசுவதும் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். என்னை கடுப்பேற்றி பார்க்கவே இந்தப்பா இப்படி எல்லாம் செய்கிறார் என்று கோபமும், வேதனையும் அடைந்து வருகிறாராம் விஜய்.



யார் இந்த எஸ்.ஏ. சி. என்கிற பெயரில் சந்திரசேகர் வெளியிடும் காணொளிகளால் அப்பா, மகன் இடையேயான விரிசல் மேலும் பெரிதாகியிருக்கிறதாம்.



விஜய்யுடன் சேர முடியாத ஆதங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி செய்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. தன் அப்பா தெருவில் நின்று காணொளி வெளியிடுவது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை