காலந்தாழ்த்திய செயற்பாட்டினால் நாடு வீழ்ச்சி!- பொருளாதார நிபுணரின் கடும் விமர்சனம்!
Mar 13, 2022 65 views Posted By : YarlSri TV
காலந்தாழ்த்திய செயற்பாட்டினால் நாடு வீழ்ச்சி!- பொருளாதார நிபுணரின் கடும் விமர்சனம்!
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பிறக்கம் செய்திருந்தால், இன்று நாட்டில் 5 மில்லியன் டொலர்களை வெளிநாட்டு ஒதுக்கங்களாக வைத்திருக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்று பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் பிரதிப்பணிப்பாளர்- டபில்யயூ .ஏ. விஜயவர்த்தனவின் இந்த கருத்தை சிங்கள நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் கோடிட்டுள்ளது.
நாட்டில் டொலரின் பெறுமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல், அதனை மிதக்கவிடவேண்டும் என்று முன்பிருந்தே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
எனினும் அரசாங்கம் அதனை மேற்கொள்ளவில்லை.
எனினும் கடந்த வாரத்தில் 203 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபா பெறுமதியை , அரசாங்கம் குறைத்துள்ளமை காரணமாக தற்போது ரூபாவின் பெறுமதி 260 ரூபாவாக உயர்ந்துள்ளதாக விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை குறைத்த நடவடிக்கை 1970-77 ஆண்டுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய நாளில் அரைக்கால் என்று கூறப்படுகின்ற 8இல் ஒரு பங்கினால் ரூபாவின் பெறுமதி குறைக்கப்பட்டது.
இதேவேளை டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை குறைப்பதன் காரணமாக ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கமுடியும்.
அத்துடன் வெளிநாட்டில் பணிபுரிவோர் தமது டொலர்களுக்கு அதிக ரூபா பெறுமதி கிடைப்பதால், அதிகளவான டொலர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பார்கள் என்றும் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
நிவர் புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை!
-
இதேபோல் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதனால் பாகிஸ்தானுக்கே அதிக லாபம். ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளுக்குள் அல் கொய்தா மற்றும் டேயீஷ் பயங்கரவாத அமைப்பினர் நுழைந்துள்ளனர் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆனது இந்தியாவின் எதிரி. அந்த அமைப்பு தலிபான்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அவர்களை ஊதுகோலாகப் பயன்படுத்தி வருகிறது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்!
-
துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவேன்; அதிபர் ஜோ பைடன்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago