ரஷியா- உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷிய அதிபர் புடின் வெளியிட்ட தகவல்
Mar 12, 2022 86 views Posted By : YarlSri TV
ரஷியா- உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷிய அதிபர் புடின் வெளியிட்ட தகவல்
ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த மாதம் 20-ஆம் திகதி போர் தொடுத்தது.
இருவாரத்திற்கும் மேலாகியும் உக்ரைன் மீதான உக்கிர போரை ரஷியா நிறுத்தவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷியா, தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.
உக்ரைன் படைகளும் கடும் சவால் அளிப்பதால், ரஷியாவில் எளிதில் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும் அதையெல்லாம் ரஷிய பொருட்படுத்த மறுத்து பதிலுக்கு பதில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், ஒருபுறம் உக்ரைன் - ரஷியா இடையே பேச்சுவார்தைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் அண்மையில் துருக்கியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. இதன்படி ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். "பேச்சுவார்த்தையில் சில நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக எங்கள் தரப்பினர் என்னிடம் கூறினர்” என்று பெலாரஸ் அதிபருடனான ஆலோசனையின் போது புடின் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago