யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!
Mar 10, 2022 90 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பும் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, 24 கரட் தூய தங்கம் நேற்று பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீருக்கு இரண்டு மாதங்களில் ஏமாற்றமளிக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் காரணம் ஏதுமின்றி அவரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது. இந்த நிலையிலேயே, வேறு வழியேதும் இல்லை என முடிவு செய்த கபீர், ஜனவரி மாதம் மாநில சட்ட உதவி சேவைகளை அணுகி, கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளிக்க ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் மாநில நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரது நிலை குறித்து மேலதிக தகவல் தெரிந்து கொள்ள அரசு முன்வந்தது. இந்த நிலையில் அவருக்கு அரசு சார்பில் மீண்டும் ஒரு வேலை ஏற்பாடு செய்து அளிக்கப்பட்டது. பாலக்காடு பகுதியில் பிறந்த அனீரா கபீர் தாம் ஒரு திருநங்கை என அடையாளம் கண்ட பின்னர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். குடும்பத்தினரிடம் இது தொடர்பில் தெரிவிக்கவும் அவரால் முடியாமல் போயுள்ளது. தன்னைப் போன்ற சமூக மக்களுடன் வாழ வேண்டும் என விரும்பி, வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு நகருக்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சியுள்ளது. இதில் வெறுத்துப்போன அவர் ஒருகட்டத்தில் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார். வேலைக்கான நேர்முகத் தேர்வில் பலமுறை அவமானங்களையே எதிர்கொண்டதாக கூறும் அனீரா கபூர், மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லக் கூடும் என அஞ்சுவதாக கூறி பல பள்ளி நிர்வாகங்கள் வேலை தர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
2-வது குழந்தைக்காக எதிர்நோக்கி காத்திருக்கும் நகுல் - ஸ்ருதி - வைரலாகும் வீடியோ - குவியும் வாழ்த்துக்கள்
-
மொராக்கோ சிறுவன் Rayan சடலம் மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்தது என்ன? கசிந்த சில தகவல்கள்..
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago