ஹூவாய் 5ஜி நெட்வொர்க் அனுமதி குறித்து சில வாரங்களில் முடிவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
Sep 29, 2021 141 views Posted By : YarlSri TV
ஹூவாய் 5ஜி நெட்வொர்க் அனுமதி குறித்து சில வாரங்களில் முடிவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகள் அடுத்த தலைமுறையான 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவை வழங்கி வருகிறது.
பெரும்பாலான நாடுகள் 5ஜியை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன. அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்தின் மீது இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து சில வாரங்களில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆனால், கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல் கனடா, டெலஸ் கார்பரேசன் போன்ற நிறுவனங்கள் ஹூவாய் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தமாட்டோம் எனத் தெரிவித்தள்ளது.
கனடாவும் அதன் பாதுகாப்பு நிறுவனங்களும் ஹூவாய் நிறுவனத்தில் இருந்து உபகரணங்களைப் பயன்படுத்தலாமா? என்று ஆய்வு செய்து வருகின்றன, ஏனெனில் தொலைபேசி சாதனங்கள் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை உருவாக்கத் தயாராகி வருகின்றன. இது மருத்துவ சாதனங்கள், பிற பயன்பாடுகளுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago