அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியவன் நான்! என ஜனாதிபதி தெரிவிப்பு
Jan 18, 2022 85 views Posted By : YarlSri TV
அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியவன் நான்! என ஜனாதிபதி தெரிவிப்பு
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் மக்கள் கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் சுகாதார விதிகளையும் முகக்கவசம் அணிவதையும் புறக்கணிப்பதால் இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருகிறதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் கொரோனா தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதை விட தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என சுட்டிக்காட்டிய அவர், தொற்றுநோய் கடந்துவிட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளதாகவும் விசனம் வெளியிட்டார்.
அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிலைநிறுத்துவதில் அரசாங்கமும் பொதுமக்களும் ஆர்வத்தை இழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago